அ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி

தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் இடம் பெற்று உள்ளன. கிட்டத்தட்ட தி.மு.க. தனது அணியை இறுதி செய்து விட்ட நிலையில், அ.தி.மு.க. அணியில் எந்தெந்த கட்சிகள் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
பா.ம.க.வுடன் அ.தி.மு.க. தரப்பில் முக்கிய நிர்வாகிகளும், தி.மு.க. தரப்பில் துரைமுருகனும், கனிமொழி எம்.பி. யும் மாறி, மாறி பேச்சுவார்த்தை நடத்தி வந்ததால், பா.ம.க. எந்த அணியில் சேரும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.
இந்த பரபரப்பான சூழ் நிலையில், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை, தியாகராயநகரில் உள்ள அன்புமணி ராமதாஸ் இல்லத்தில் அமைச்சர் தங்கமணி நேற்று காலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பை தொடர்ந்து, அ.தி.மு.க-பா.ம.க. கூட்டணி ஏற்படுவது உறுதியானது.
அதன்படி நேற்று காலை 10.20 மணிக்கு அந்த ஓட்டலுக்கு முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சரும், ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் வந்தனர்.
அவர்களை தொடர்ந்து 10.28 மணிக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. ஆகியோர் அங்கு வந்தனர். அவர்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பொன்னாடை அணிவித்து, வரவேற்றனர். பின்னர் அவர்கள் தனி அறையில் சுமார் 10 நிமிடங்கள் ஆலோசனை மேற்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து கூட்டணி உடன்பாடு தொடர்பான அறிக்கை உடனடியாக வெளியிடப்பட்டது.
தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், அ.தி.மு.க. சார்பில் 21 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு பா.ம.க. தனது முழு ஆதரவை அளிக்கும் என்றும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு இருக்கிறது. இதைத்தொடர்ந்து அவர் கள் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.
அப்போது, அ.தி.மு.க- பா.ம.க. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு விவரங்கள் குறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரான நானும், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி ஆகியோரும் இணைந்து ஏகமனதாக இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
பா.ம.க.வை தொடர்ந்து மத்திய மந்திரியும், தமிழக பா.ஜனதா கூட்டணி பொறுப்பாளருமான பியூஸ் கோயல், மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன், பா.ஜனதா மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் ஆகியோர் அந்த ஓட்டலுக்கு வந்தனர். தமிழக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் அவர்களை வரவேற்றனர்.
அதனை தொடர்ந்து முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருடன், அவர்கள் அ.தி.மு.க-பா.ஜ.க. இடையேயான தொகுதி பங்கீட்டு குறித்து 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.
பகல் 2.30 மணிக்கு தொடங்கி, மாலை 4.45 மணி வரை நீண்ட நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற் கான ஒப்பந்தத்தில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
அதன்பிறகு, தே.மு.தி.க., த.மா.கா. ஆகிய கட்சிகளுடன் அ.தி.மு.க. சார்பில் நேற்று மாலை ரகசியமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
தே.மு.தி.க.வை அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெறச் செய்வதற்கான முயற்சியில் மும்முரமாக ஈடுபட்டுள்ள மத்திய மந்திரி பியூஸ் கோயல் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சந்தித்து பேசினார். ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எதுவும் ஏற்படவில்லை. இதனால் அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இடம்பெறுவதில் இழுபறி நிலை நீடிக்கிறது.
விஜயகாந்தை சந்தித்து பேசிய பின் பியூஸ் கோயல் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், விஜயகாந்த் தனது பழைய நண்பர் என்றும், அவரிடம் உடல்நலம் விசாரிக்க வந்ததாகவும் கூறினார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 40 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில், அ.தி.மு.க. கூட்டணியில் இதுவரை பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள், பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள் என மொத்தம் 12 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கின்றன.
தே.மு.தி.க., த.மா.கா. கட்சிகளுடன் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு அதிகாரபூர்வமாக முடிந்த பிறகு, அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடம் ஒதுக்கப்படலாம் என்று தெரிகிறது.
Related :
2019 மக்களவைத் தேர்தல்: மத்திய சென்னையில் தயாநிதி மாறன்; தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு
தூத்துக்குடியில் கனிமொழி போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு019 மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் ...
தேமுதிகவுக்கு கைவிரித்த திமுக: இடமில்லை என துரைமுருகன் பேட்டி
சென்னை கோட்டூர்புரத்தில் இன்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகனுடன் தே.மு.தி.க. மூத்த நிர்வாகிகளான முன்னாள் எம்எல்ஏ அனகை முருகேசன், இளங்கோவன் உள்ளிட்ட சிலர் சந்தித்து பேசினர். தனது இல்லத்தில் ...
சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்: பிரதமர் மோடி அறிவிப்பு
சென்னை சென்ட்ரல் ரயில்நிலையத்துக்கு மறைந்த முதல்வர் எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும் என வண்டலூர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி அறிவித்தார்.மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக ...
குடும்ப பிரச்சினை காரணமாக இரு மகன்களை கொன்று தாய் தற்கொலை
கடலூர் அருகே பாதிரிக்குப்பம் பகுதியில் வசித்து வருபவர் மதிவாணன் (40). இவர் அதே பகுதியில் மெடிக்கல் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி சிவசங்கரி (35). இவர்களுக்கு ...
அ.தி.மு.க.வுடன் கூட்டணி உடன்பாடுபா.ம.க.வுக்கு 7; பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகள்தே.மு.தி.க.வுடன் இழுபறி
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. கூட்டணியில் தே.மு.தி.க. இணைவதில் இழுபறி நீடிக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என ...
குப்பைமேட்டில் கிடைத்த பெண்ணின் கை, கால்கள் அடையாளம் தெரிந்தது: திரைப்பட இயக்குநரான கணவர் கைது
பள்ளிக்கரணை குப்பைமேட்டில் கிடந்த பெண்ணின் கை, கால்கள் யாருடையது என அடையாளம் தெரிந்தது. சினிமா இயக்குநரான கணவரே கொலை செய்தது தெரியவந்துள்ளது.கடந்த ஜனவரி மாதம் 20-ம் தேதி ...
கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை; சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிப்பு
கருணாநிதியின் அழகு தமிழுக்கு மயங்காதவர் யாரும் இல்லை என சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.சட்டப்பேரவையின் 2வது நாள் கூட்டம் சபாநாயகர் தனபால் தலைமையில் இன்று தொடங்கியது. இதில், ...
கூலிப்படை உதவியுடன் மகனை கொன்ற கள்ளக்காதலனை தீர்த்து கட்டிய பெண்
சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்தவர் நாகராஜ் (28). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் வேலை பார்த்து வந்த மஞ்சுளா (37) என்பவருடன் கள்ளக்காதல் ...
சென்னையில் 15 ஆண்டுகளுக்குப்பின் மழையளவு 55 சதவீதம் குறைவு: கடும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டது. மழை சீசன் முடிவடையும் தருவாயில் உள்ளது. பல மாவட்டங்களில் மழை குறைவாகவே பெய்துள்ளது. இருந்தாலும் சென்னையில் மிகவும் குறைந்த ...
அரசு நிர்வாகம் முற்றிலும் நிலை குலைந்துள்ளதற்கு எச்.ஐ.வி. ரத்த விவகாரமே சாட்சி - ஸ்டாலின்
திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கரை உடனடியாக நீக்க வேண்டும். சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ...