மாதவிடாய் (மெனோபாஸ்) சமையத்தில் பெண்களுக்கான சில டிப்ஸ்

உங்கள் இடுப்பு பகுதி உறுதியாய் இருக்க உடற்பயிற்சி அவசியம்.
30 வயதிற்குள் குழந்தை பெறுவது ஆரோக்கியமானது.
பிறப்புறுப்புகளை கடின, கார சோப் கொண்டு சுத்தம் செய்யாதீர்கள்.
மாதவிடாய் நிற்கும் காலத்தில் பல பெண்கள் சில பிரச்சினைகளை எதிர் கொள்கின்றனர். இவர்களை இக்கால கட்டத்தில் தாவர உணவினை எடுத்துக் கொள்ளவும், சர்க்கரையினை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்படுகின்றது.
மாதவிலக்கு காலத்தில் வயிற்றை இழுத்து பிடித்து வலி, கால் வலி இவற்றினை அனுபவிப்பவர்கள் மருத்துவ ஆலோசனை பெற்று ஒமேகா, கால்ஷியம் இவற்றினை எடுத்துக் கொள்ளலாம்.
மாதவிலக்கு முறையற்று இருந்தால் முதலில் எடையினை கவனியுங்கள். அதிக மனஉளைச்சல் கூட காரணம் ஆகலாம். தைராய்டு பிரச்சனை இருக்கின்றதா என்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள். உடற்பயிற்சியினை அன்றாடம் செய்யுங்கள்.
சிலருக்கு மாதவிலக்கு சுற்றின் நடுவில் சிறு சிறு ரத்த திட்டுகள் ஏற்படலாம். பாலிப்ஸ் எனப்படும் கருப்பை வாய் இவற்றில் ஏற்படும் சதையின் அதிக வளர்ச்சி காரணமாக இருக்கலாம். மருத்துவர் இதனை பரிசோதித்து நீக்கி விடுவார்.
சிலருக்கு மாதவிலக்கிற்கு ஓரிரு நாட்கள் முன்பு ஒருவித மனசோர்வு, பயம், எரிச்சல், சக்தி இன்மை, அதிகம் எதனையாவது சாப்பிட வேண்டும் என்ற உணர்வு ஆகியவை ஏற்படலாம். அதிக பழங்கள், காய்கறிகள், நார்சத்து கூடிய உணவு இவை தீர்வு கொடுக்கும். அசைவ உணவினை தவிர்ப்பது நல்லது. முடியவில்லை என்றால் மிகவும் குறைத்து கொள்ளலாம்.
ஒரு பெண்ணுக்கு 40-55 வயதிற்குள் மாதவிடாய் நிற்கலாம். இது அவரது தாய், பரம்பரை மற்றும் வேறு சில காரணங்களைக் கொண்டு ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.
இந்த கால கட்டத்தில் பெண்களுக்கு சில பாதிப்புகள் ஏற்படலாம்.
வயிற்றினைச் சுற்றி எடை கூடுதல்
பிறப்புறுப்பு வறட்சி ஆகலாம்.
சிறுநீர் பாதை, சிறுநீர் பையில் கிருமி தாக்குதல்
கவனக்குறைவு ஆகியவை ஏற்படலாம்.
இக்கால கட்டத்தில் பழங்கள், காய்கறிகள் சேர்த்துக் கொள்ளுங்கள்.
உடற்பயிற்சி இதனை தவிர்ப்பதில் முக்கிய பங்கு பெறுகின்றது..
பதட்டம் பல விதங்களில் ஒருவரிடம் வெளிப்படும். கை, கால் நடுங்கும். சிலருக்கு நெஞ்சு பிடிப்பு போல இருக்கும் என பலவற்றினை கூறலாம்.
பதட்டம் என்பது ஒருவகை பயம். நிம்மதி இன்மை, ஏதோ இல்லாத ஒன்று இருப்பதாக நடந்து விடப்போவதாக நினைக்கும் பயம்.
ஆனால் இந்த பதட்டம் மனிதனை மிகவும் பாதிக்கின்றது என்பதால் இதிலிருந்து வெளிவருவதனை செயல்படுத்த வேண்டும்.
பலருக்கு எப்பொழுதும் ஒரு பீதி இருக்கும். தான் வேலை செய்யும் இடத்தில், பலர் இருக்கும் கூட்டத்தில் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்களோ என்ற தேவையில்லாத பீதி இருக்கும். அதிகம் வியர்க்கும், நெஞ்சு படபடக்கும்.
சிலருக்கு இரவில் தூக்கமே வராது. அதிக சோர்வு இருக்கும். ஆனால் தூக்கம் வராது. இதற்கு காரணம் மனஉளைச்சலால், மூளை இரவில் ஓய்வு எடுப்பதில்லை.
சிலருக்கு அன்றாட சாதாரண வேலைகள் செய்வதே மூச்சு வாங்கும்.
ஏதோ எல்லாமே சரியாக நடக்காதது போல் இருப்பர்.
வயிற்று பிரட்டல், வாந்தி அடிக்கடி இருக்கும்.
உடல் வலி இருந்து கொண்டே இருக்கும்.
இத்தகு பிரச்சினைகளிலிருந்து அவசியம் வெளிவர வேண்டும். முதலில் இவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருக்கின்றதா என்று மருத்துவரிடம் பரிசோதனை செய்து அதற்கான சிகிச்சையினை எடுத்துக் கொள்ள வேண்டும்.
உடற்பயிற்சி சதைகளை வலுவாக்கும். எலும்புகளை உறுதியாக்கும். இவை தெரிந்ததே. உடற்பயிற்சியின் பொழுது மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் சீராகுவதால் பல நன்மைகள் ஏற்படுவதாக இப்பொழுது கூறப்படுகின்றது.
உறுதியாக கூற மேலும் கூடுதல் ஆய்வுகள் தேவைப்படுவதால் அதனை இங்கு விவரித்துக் கூறவில்லை.
அவ்வப்போது ‘உண்ணா விரதம்’ இருப்பதால் மூளையிலுள்ள திசுக்களில் சேரும் நச்சுக்கள் சுத்தமடைவதாகவும் கூறப்படுகின்றது.
யோகாவும், தியானமும் ‘பதட்டம்’ குறைய மிகச் சிறந்த வழிகளாகும்.
Related :
மாதவிடாய் (மெனோபாஸ்) சமையத்தில் பெண்களுக்கான சில டிப்ஸ்
உங்கள் மாதவிலக்கிற்கும் எடைக்கும் சம்பந்தம் உள்ளது. அதிக எடை முறையான மாதவிலக்கினை பாதிக்கும். ஆரோக்கியமான நார்சத்து மிகுந்த உணவினை உட்கொள்ளுங்கள். இது எடையை சீராய் வைக்கும். மலச்சிக்கலை ...
கேரட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் |carrot juice benefits in tamil
கேரட் ஜூஸ் குடித்து வந்தால், அதில் உள்ள பீட்டா-கரோட்டீன் மற்றும் லுடீன், பார்வை கோளாறு ஏற்படுவதைத் தடுத்து, நல்ல பாதுகாப்பு வழங்கும். கேரட் ஜூஸ் சாறு எடுத்து தேனுடன் ...
நிரிழிவு நோயை கட்டுப்படுத்தும் வெந்தயக்கீரை | vendhaya keerai benefits in tamil
வெந்தயத்தை சமையலுக்கு தினமும் பயன்படுத்துகிறோம். இட்லி தோசைக்கு மாவாட்டுகையில் சிறிதளவு வெந்தயத்தை போடுவது வழக்கம். ஆனால் வெந்தயக்கீரையை பயன்படுத்துபவர்கள் மிகவும் குறைவு. சாதராண மண் தரையில் வெந்தயத்தை ...
கோடை கால வெப்பத்திலிருந்து தப்பிக்க கிர்ணி பழம் சாப்பிடுங்க
கடுமையாக வாட்டி வதைக்கும் கோடை காலங்களில் பழங்களை மக்கள் அதிகம் விரும்பி உண்கின்றனர். அப்படியான பழ வகைகளில் ஒன்றுதான் முலாம்பழம். இந்த முலாம் பழம் சாப்பிடுவதால் நமக்கு ...
குறைவான விலையில் நிறைவான பலன் தரும் தர்பூசணி பழத்தின் பயன்கள்
மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும். இதயத்துடிப்பை சீராக்கும். நிரிழிவு நோய், இதய நோய், ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம். ...
தினமும் சீரக தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் / seeragam benefits in tamil
சீரக தண்ணீரை தொடர்ந்து பருகுவதால், பல்வேறு உடல்நல பிரச்சினைகளை போக்கிவிடலாம்.வயிற்று ஆரோக்கியத்துக்கும் நலம் சேர்க்கும்.துரித உணவுகளால் ஏற்படும் அஜீரண கோளாறு, அசிடிட்டி, குமட்டல் போன்ற பிரச்சனைகள் வராமலும் ...
வெந்தயத்தில் உள்ள அற்புத மருத்துவ குணங்கள் / venthayam benefits in tamil
வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன. மேலும் சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியசத்து, பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும், தயாமின், ரிபோபிளேவின், ...
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?
காலநிலை மாற்றங்கள் ஏற்படும் போது அவை ஒத்து கொ ள்ளாமல் சிலர் ஜலதோசம்,மற்றும் புளூ ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். உடலில் நோய் எதிர்ப்புதன்மை குறைவாக இருப்பதே இதற்கு காரணம். ...
சுளுக்கு கழுத்துவலி குணமாக / Kaluthu Vali Tamil
சுளுக்கு குணமாக வெள்ளைப் பூண்டை உப்பு சேர்த்து இடித்து சுளுக்கு உள்ள இடத்தில் தடவிவர சுளுக்கு குணமாகும்.சுளுக்கு குணமாக மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு மூன்றையும் வெந்நீர்விட்டு அரைத்து ...
உடலுக்குக் குளிர்ச்சி தரும் இளநீர்
இளநீர் உடலைக் குளிர்ச்சியாக்குகிறது. வேர்குரு, சின்னம்மை, பெரியம்மை வியாதியைக் கட்டுப்படுத்துகிறது. இரத்தத்தில் உள்ள விஷத்தன்மையை மாற்றுகிறது. வயிற்றுப் போக்கு, காலராவைக் கட்டுப்படுத்துவதுடன் சிறுநீரகம் சிறப்பாக செயல்பட வைக்கிறது. ...